கொரோனாத் தொற்றால் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரிப்பு!

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட உயிரியல் பாதுகாப்பு குமிழி யோசனையை தற்போது நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

குமிழி யோசனையை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இருந்தால், பரிந்துரைக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முறைகளுக்குப் புறம்பாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அதைச் செய்ய வேண்டும்.

இதேவேளை, கொரோனா நோயினால் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய தரவுகளின்படி தெரிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் உட்சுரப்பியல் வல்லுநர் மணில்க சுமனதிலக்க தெரிவித்துள்ளார்.

மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு நீரிழிவு நோய் இல்லாதபோது கொரோனா நீரிழிவு நோயை உருவாக்கும் போக்கைக் கொண்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பருத்தித்துறைக் கடற்பரப்பில் மீனவர்கள் 9 பேர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *