
நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் நுழைந்த தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படைப் படகு மோதியதில் தமிழக மீனவரின் படகு முழுமையாக நீரில் மூழ்கியதாக தமிழக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட ட்ரோளர் படகுகளில் இரு படகுகள் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் உள்நுழைந்த சமயம் படகை அண்மித்த கடற்படையினரின் படகு மோதியதிலேயே தமது படகு நொருங்கியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் குறித்த விபத்து நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றதாகவும், சம்பவத்தை தெளிவாக அவதானித்ததாகவும் தமிழக மீனவர்கள் தரப்பு தெரிவிக்கின்றது.
குறித்த விபத்தில் மூழ்கிய படகில் உயிருக்கு போராடிய 7 ராமேஸ்வரம் மீனவர்களை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது! பிரிட்டன் அமைச்சரிடம் பீரிஸ் தெரிவிப்பு