மட்டு. மகாஜனா கல்லூரியில் 14 மாணவர்களுக்கு கொரோனா!

<!–

மட்டு. மகாஜனா கல்லூரியில் 14 மாணவர்களுக்கு கொரோனா! – Athavan News

மட்டக்களப்பு மாகாஜனா  மகாஜனா கல்லூரி மாணவர்கள் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி நேற்று (புதன்கிழமை) கண்டறியப்பட்டதையடுத்து மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 65 ஆக கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதாக  மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலவலக பணிப்பாளர் வைத்தியர் இ. உதயகுமார் தெரிவித்தார்.

குறித்த பாடசாலையில் மாணவர்களுக்கு நேற்று (புதன்கிழமை) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பிரிசோதனையில் 14 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டு ள்ளதையடுத்த  ஜனவரி முதலாம் திதி தொடக்கம் இன்று 19 ம் திகதிவரையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பிரிசோதனையில் வங்கி ஊழியர்கள் மாணவர்கள் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.

இதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவர்களுடன் நேரடி தொடர்புபட்ட 94 பேரை வீடுகளில் தனிமைபடுத்தியுள்ளதுடன் இவர்களுக்கு 7 நாட்களின் பின்னர் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணித்துவருவதாக அவர் தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *