சிறுவர்கள் மத்தியில் கொரோனாவின் ஒமிக்ரோன் மாறுபாடு தொடர்பில் அறிக்கையை எதிர்பார்ப்பதாக சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்
எமது செய்திச்சேவைக்கு தகவல் அளித்த அவர், கடந்த இரண்டு வாரங்களில் சிறுவர்கள் மத்தியில் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார்.
ஏற்கனவே டிசம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் சிறுவர்கள் மத்தியில் கொரோனா தொற்று குறைந்திருந்தது.
எனினும் கிறிஸ்மஸ் நீண்ட விடுமுறையின் பின்னர் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்ததாக அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து மாதிரிகள் பாிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், டெல்டா அல்லது ஒமிக்ரோன் தொற்றுக்களில் இந்த சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பதை அறிக்கை வந்ததும் கண்டறியமுடியும் என்றும் தீபால் பெரேரா குறிப்பிட்டார்.
பெரும்பாலான மக்கள் தற்போது ஒன்றுக்கூடலின்போது முகக்கவசங்களை அணிவதில்லை. குறிப்பாக திருமணங்கள் உட்பட்ட நிகழ்வுகளில் இது தவிர்க்கப்படுகிறது.
இந்தநிலையில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர், 3வது பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறும் இதன் மூலம் தமது பிள்ளைகளை பாதுகாக்கமுடியும் என்றும் வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
