GAFSO நிறுவன அனுசரனையில் காரைதீவு மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகங்களைச் சேர்ந்த கிராம நிலதாரி உத்தியோகத்தர்களுக்கான வீட்டு வன்முறை, பாலியல் வன்முறை (SGBV) சம்பந்தமான சட்டதிட்டங்களும், பாதிக்கப்பட்டவர்களைக் கையாளும் முறை பற்றியதுமான ஒரு நாள் பயிற்சி வகுப்பு அண்மையில் காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இந் இப்பயிற்சிநெறி GAFSO நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ஜனாப் . காமில் இம்டாட் அவர்களால் தலைமை தாங்கி நடாத்தி வைக்கப்பட்டதுடன் இப் பயிற்சி நெறியின் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் , உதவி பிரதேச செயலாளர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், இப்பயிற்சி நெறியின் வளவாளராக சட்டத்தரணி ஜனாப் பஹீஜ் கலந்து கொண்டார்.