15 நாள்களுக்குள் மட்டும் 5 மலேரியா நோயாளர்கள்!

இலங்கையில் கடந்த 15 நாள்களுக்குள் மட்டும், 5 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் உட்பட கம்பஹா, கொழும்பு மற்றும் காலி ஆகிய மாவட்டங்கள் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன என்று மலேரியா நோய் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள மலேரியா நோயாளர்கள் ஐவரும், ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள். அவர்களில் இருவர் யாழ்ப்பாணத்திலும், ஏனைய மூவர் கொழும்பு, கம்பஹா மற்றும் காலி ஆகிய இடங்களிலும் வசிப்பவர்கள். குறித்த அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த ஆண்டு நாட்டில் 26 மலேரியா நோயாளர்கள் பதிவாகினர். இந்த ஆண்டின் முதல் 15 நாள்களில் ஐந்து நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். மலேரியா நோயால் கண்டறியப்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிப்பதே நாட்டின் தேசிய கொள்கை. இலங்கையில் இறுதியாக 2007ஆம் ஆண்டில் மலேரியாவால் இறப்பு பதிவாகியுள்ளது -என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *