வவுனியாவில் பேருந்து நடத்துனருக்கு கொரோனா தொற்று..!

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையில் கடமையாற்றும் பேருந்து நடத்துனருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் குறித்த சாலையில் கடமைபுரியும் சாரதி ஒருவருக்கு நேற்றையதினம் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து சுகாதார பிரிவினரால் வவுனியா சாலையில் கடமையாற்றும் சாரதி மற்றும் நடத்துனர்களிடம் இன்று வியாழக்கிழமை அன்ரியன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நடத்துனர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து அவரை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *