கிளிநொச்சி குளத்தில் மிதக்கும் சாராயப் போத்தல்கள்

கிளிநொச்சி குளம் தற்போது சாராயப் போத்தல்களும், பியர் ரின்களும் நிரம்பி வழியும் குளமாக காணப்படுகின்றது.

இக்குளத்தில் அதிகளவு மதுப்பிரியர்கள், தாங்கள் அருந்துகின்ற சாராய போத்தல்கள் மற்றும் பியர் ரின்களை குளத்தில் வீசுவதனால் குளத்தில் சாராய, பியர் ரின்கள் எந்நேரமும் மிதப்பதைக் காணலாம்.

அத்துடன், நன்னீர் மீன்பிடிக்காக வலை விரிக்கும் மீன் பிடியாளர் ஒருவரின் வலையில் மீன் அகற்றப்படுகின்றதோ இல்லையோ, பியர் ரின்களும் சாராயப் போத்தல்களும் வலையில் சிக்குகின்ற அவலம் தொடர்கின்றது.

மேலும், கிளிநொச்சி குளம் சுற்றுலா மையமாக உருவாக உள்ளது.

இந்நிலையில், தற்போது இரணைமடுக் குளத்தில் இருந்து இக்குளத்துக்கு நீர் வழங்கப்பட்டு, கிளிநொச்சி நகரத்துக்கான குடிநீர் வழங்கலுக்காக அருகில் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானங்கள் எல்லாம் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே , கிளிநொச்சி நகரத்தின் கழிவுகள் இக்குளத்தின் சூழலில் கொட்டப்படுவதும் குளத்துக்குள் பியர் ரின்கள், சாராயப் போத்தல்கள் மிதப்பதைத் தவிர்ப்பதற்கும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *