
நாட்டில் மனித உரிமை மீறல்கள் இப்போதும் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மாஸ்ரர் சரத்பொன்சேகா சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உரையில் தேசிய பாதுகாப்பு,மற்றும் மனித உரிமை தொடர்பில் கூறியிருந்தார்.
அதில் எமக்கு திருப்தி இல்லை.விசாரணை என்று அழைத்து செல்லப்பட்டவர்கள் பலர் இன்று இல்லை.
அவர்களுக்கு என்ன நடந்தது என்று யாராலும் கூற முடியாது.அட்மிரல் ஒருவர் 11 பேரை கடத்தி கப்பம் கேட்டார்.
குறித்த கொலை விடயத்தில் என்ன நடந்தது என்பது தெரியாது.இன்னும் பலர் சிறையில் உள்ளனர்.
ஆகவே இங்கு மனித உரிமை என்ற விடயம் நாட்டில் கேள்வி குறியாக உள்ளது.
முன்னாள் எல்லாம் பொலிவாக செய்வதாக காட்டிக்கொண்டு பின்னால் நிர்வாணத்தை மறைக்கின்றனர் என்றார்.