
தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தாங்கள் பிரிவதாக ஜனவரி 17ம் தேதி அறிவிப்பு வெளியிட்டனர். அதில் இருந்து அவர்களின் பிரிவுக்கு என்ன காரணமாக இருக்கும் என ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பல ஆண்டுகளாகவே தனுஷ், ஐஸ்வர்யா இடையே பிரச்சனையாக இருந்திருக்கிறது. இரண்டு பிள்ளைகளாகிவிட்டது, பார்த்து போம்மா என்று அப்பா ரஜினி சொன்ன ஒரே வார்த்தைக்காக 6 ஆண்டுகளாக அமைதியாக இருந்தாராம் ஐஸ்வர்யா.
தனுஷின் பெயர் ஏதாவது ஒரு நடிகையுடன் சேர்ந்து கிசுகிசுக்களில் வருவது அதிகரித்தது. முதலில் அதை கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள் ரஜினியும், ஐஸ்வர்யாவும். ஒரு கட்டத்தில் கிசுகிசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, அது என்ன இவர் பற்றி மட்டும் அடிக்கடி வருகிறது என்று ஐஸ்வர்யாவுக்கு சந்தேகம் ஏற்பட்டதாம்.
கிசுகிசுக்கள் பற்றி நடிகை ஒருவரிடம் ஐஸ்வர்யா கோபமாக விசாரித்தாராம். இதையடுத்து ஐஸ்வர்யா இப்படி பேசினார் என அந்த நடிகை தனுஷிடம் போட்டுக் கொடுத்தாராம்.
என்னை பற்றி இன்டஸ்ரியில் இருப்பவர்களிடம் போய் விசாரிப்பியா என ஐஸ்வர்யாவிடம் சீறினாராம் தனுஷ். இப்படி சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் பூதாகரமாக வெடித்து தான் விவாகரத்தில் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
குழந்தைகள் இருக்கிறார்கள், அவர்களுக்காக பொறுத்துக் கொண்டு போகலாம் என்று எல்லா விஷயத்தையும் கண்டும் காணாமலும் இருந்தாராம் ஐஸ்வர்யா. ஆனால் இனியும் பொறுக்க முடியாது என்கிற நிலைமை வந்த பிறகே அப்பா, இனியும் என்னால் முடியாதுப்பா என்று ஐஸ்வர்யா கூறியதாக கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.
மகளின் திருமணத்தை காப்பாற்ற ரஜினி மீண்டும் மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தைகள் எல்லாம் தோல்வி அடைந்துவிட்டதாம். இனியும் இவர்களை சேர்த்து வைக்க முடியாது என்று தெரிந்த பிறகே ரஜினி அமைதியாகிவிட்டாராம்.
இருப்பினும் மகளின் வாழ்க்கையை நினைத்து கண்ணீர்விட்டாராம் ரஜினி.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.