
உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் ராஜு ஜெயமோகன் டைட்டிலை வென்றார். அவருக்கு ரூ. 50 லட்சம் பரிசுத் தொகை கிடைத்தது.
விஜய் டிவி பிரபலமான ப்ரியங்கா தேஷ்பாண்டே தான் ரன்னர். 106 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கியதற்காக ரூ. 28 லட்சம் சம்பளம் வாங்கியிருக்கிறார் ப்ரியங்கா என தகவல் வெளியாகியுள்ளது.
அமீருக்கு ரூ. 50 லட்சத்து 60 ஆயிரமும், பாவனிக்கு ரூ. 20 லட்சமும், நிரூப்புக்கு ரூ. 11 லட்சமும் சம்பளமாக கிடைத்திருக்கிறது.
முன்னதாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட தாமரைக்கு ரூ. 9 லட்சத்து 80 ஆயிரம் சம்பளம் கிடைத்தது. வாரத்திற்கு ரூ. 70 ஆயிரம் என்று பேசித் தான் அவர் உள்ளே சென்றாராம்.
பிக் பாஸ் நிகழ்ச்சி தான் முடிந்துவிட்டதே இனி அடுத்த வேலையை பார்ப்போம் என்று யாரும் செல்ல முடியாது. அதற்கு காரணம் பிக் பாஸ் அல்டிமேட். ஓடிடியில் அதுவும் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகவிருக்கிறது பிக் பாஸ் அல்டிமேட்.
பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியையும் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கவிருக்கிறார். ஜனவரி 30ம் தேதி அந்த நிகழ்ச்சி துவங்கவிருக்கிறது. இதுவரை நடந்து முடிந்த 5 சீசன்களில் கலந்து கொண்டவர்கள் தான் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

