தங்கம் வென்ற இலங்கை வீரனுக்கு வீடு கொடுத்த பிரதமர்

டோக்கியோவில் நடைபெற்ற பராலிம்பில் 2020 ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி ,இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுக்கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புதிய வீடொன்றை நேற்று அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வின் தலையீட்டின் கீழ் பெற்றுக்கொடுக்கப்பட்ட குறித்த வீட்டிற்கான ‘அன்பளிப்பு பத்திரம்’ பிரதமரால் வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு அலரி மாளிகையில் வைத்து வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் பரா வீர வீராங்கனைகளின் திறமை உயர் மட்டத்தில் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ , எதிர்காலத்தில் தேசிய விளையாட்டு போட்டியில் பரா விளையாட்டுகளையும்; சேர்க்கும் யோசனை குறித்து பிரதமருக்கு விளக்கமளித்துள்ளார்.

மேலும் பரா வீர வீராங்கனைகளின் திறமையை வெளிக்கொணர்வதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிப்பது பாராட்டுக்குரிய விடயமாகும் என பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *