மக்களின் கஞ்சியில் விஷம் வைத்த கோட்டா அரசு – முஜிருப் ரஹுமான்

ஜனாதிபதி கோட்டாவால் ஆரம்பிக்கப்பட்ட சுபீட்சத்தின் நோக்கு என்ற திட்டம் நாட்டில் மக்களை கஞ்சிக்கு கூட வழியில்லாமல் செய்து விட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிருப் ரஹுமான் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.

இந்த அரசு உள்ளூராட்சி தேர்தலை நிறுத்தியுள்ளது.சீன உர நிறுவனத்துடன் டீல் பேசி ,குப்பை மல கழிவு உரத்துக்கு இந்த அரசு நட்ட ஈடு வழங்கியுள்ளது.

இறக்குமதி செய்யப்படாத தரம் அற்ற உரத்துக்கு நட்ட ஈடு என்ற பெயரில் இந்த அரசு டீல் பேசியுள்ளது.

உரம் தொடர்பில் அமைச்சின் செயலரும் தெரிவித்தள்ளார்.அவரிடம் கேளுங்கள்.நாட்டுக்கு நல்லது செய்கிறோம் என்று கூறிக்கொண்டு ஆட்சி பீடம் எரிய அரசு.புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்து இப்போது மக்களை கஞ்சி குடிக்க கூட இயலாத நிலைக்கு தள்ளி விட்டார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *