புகையிரத்தத்தில் மோதி காட்டு யானை உயிரிழப்பு!

அருவக்காட்டிலிருந்து – பாலாவி சிமெந்து தொழிற்சாலைக்கு சுண்ணாம்பு கற்களை ஏற்றிச் செல்லும் புகையிரதத்தில் நேற்று நள்ளிரவு காட்டு யானையொன்று மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தது.

குறித்த விபத்துச் சம்பவம் அருவைக்காடு சுண்ணாம்புக்கள் அகழ்வுபணி இடம்பெறும் பகுதியிலிருந்து 2 கிலோமீற்றர் தூரத்தில் இடம்பெற்றுள்ளதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த யானைக்கு மிருக வைத்தியர் இசுருவினால் உடற்கூற்று பரிசோதனை இன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த யானை 35 வயது மதிக்கதக்கதாக காணப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *