நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை ஐந்தாக அதிகரிப்போம்! – மத்திய வங்கி ஆளுநர்

நாட்டின் பொருளாதாரம் குறைந்து காணப்பட்டாலும் மக்களும் செய்ய வேண்டிய சேவைகளை நாம் தொடர்ந்து செய்து வருகின்றோம் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிமால் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொருளாதார மற்றும் பாதுகாப்பு தொடர்பில் கருத்தில் கொண்டு சிறப்பான தடுப்பூசி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2021 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 4 வீதமாக காணப்பட்டது.

அத்துடன், கடந்த ஜீன் மாதம் முதல் ஏற்றுமதி மாதாந்த வருமானம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளது.

மேலும், சுற்றுலாத் துறையால் கடந்த டிசம்பர் மாதம் முதல் 45,000 வரை பயணிகள் வருகை தந்துள்ளனர்.

2021ஆம் ஆண்டுக்கு பின்னர் நாங்கள் பணம் அனுப்புவதில் வேகம் குறைந்துள்ளது.

இந்த நிலையிலும் பொருளாதார வளர்ச்சியை 5 வீதமாக உயர்த்த முயற்சிக்கின்றோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *