இலங்கை தொண்டர் கடற்படையின் வருடாந்த பயிற்சி முகாமின் இறுதிநாள் நிகழ்வு!

இலங்கை தொண்டர் கடற்படையின் வருடாந்த பயிற்சி முகாமின் இறுதிநாள் நிகழ்வுகள், கடற்படை பயிற்சி மைதானத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

தொண்டர் கடற்படை வீரர்களின் தொழில் திறன் மற்றும் அறிவை விருத்தி செய்யும் வகையில், கடந்த 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த முகாம், அணிவகுப்பு மரியாதை மற்றும் வண்ணமயமான கலாச்சார காட்சியுடன் இன்று நிறைவு பெற்றுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த கடற்படை தளபதி,

இந்த தொண்டர் படை தேசிய மற்றும் தேசிய அவசரநிலை மற்றும் பேரழிவுகளுக்கு ஏற்ப நிபுணத்துவம் மற்றும் மனிதவளத்தை வழங்க வல்லமை பெற்றுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் விழிப்புடன் இருக்கும் சக்தியாக மாறியுள்ளது.

கடற்படையுடன் இணைந்து, தன்னார்வத் தொண்டர் கடற்படை தொற்றுநோய் நிலைமைகளில் பல்வேறு சேவைகளை செய்துள்ளது.

நாட்டுக்கு விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் சர்வதேச சாதனைகளை கொண்டு சேர்ப்பதில் கடற்படையின் தன்னார்வ தொண்டர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *