தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் விலங்குகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

மிருகக்காட்சிசாலையில் விலங்குகள் உயிரிழந்தமைக்கு யார் பொறுப்பு கூற வேண்டும் என இன்றைய தினம் வனவிலங்கு கால்நடை அதிகாரிகள் சங்கத்தால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த வனவிலங்கு கால்நடை வைத்தியர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சுஹதா ஜயவர்தன,

மிருகக்காட்சிசாலையில் விலங்குகள் உயிரிழந்ததற்கு, மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் மிருகக்காட்சிசாலையின் கால்நடை வைத்தியர்களே பொறுப்பு என, குற்றம் சுமத்திய ஊழியர்கள் குழுவொன்றின் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பாக, வனவிலங்கு கால்நடை அதிகாரிகள் சங்கம் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை இன்று நடாத்தியது.

இறந்த அனைத்து விலங்குகளின் பிரேதப் பரிசோதனையும் உரிய முறையில் நடைபெற்று வருகிறது.

கால்நடை மருத்துவர்களோ, மிருகக்காட்சிசாலை நிர்வாகமோ விலங்குகள் இறந்தது குறித்தும், கால்நடைகளுக்கு உணவளிப்பதை கட்டுப்படுத்துவது குறித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விலங்குகள் இறப்பு தொடர்பில் தகவல் வழங்கிய ஊழியர்கள் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் புதிய பிறப்புகள் பற்றி குறிப்பிடாதது ஆச்சரியமளிக்கிறது.

மிருகக்காட்சிசாலையின் கால்நடைப் பணிக்கான தடைகளை நீக்கியதன் மூலம் விலங்குகளுக்கு மேலும் சேவைகளை வழங்குவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான அநீதிகளை இந்தியா வேடிக்கை பார்க்கக்கூடாது! பா.ம.க. நிறுவுநர் தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *