விஷேட வர்த்தமானி அறிவிப்பு வௌியானது!

தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்களுக்கான அதிகபட்ச கட்டணத்தை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலானது, நுகர்வோர் விவகார அதிகார சபையால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஆகக்கூடிய கட்டணமாக 6,500 ரூபா மற்றும் அன்டிஜன் பரிசோதனைக்கு ஆகக்கூடிய கட்டணமாக 2,000 ரூபா கட்டணம் என்ற அடிப்படையில் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply