
நாட்டில் உள்ள இரத்த வங்கிகளில் குருதியின் இருப்பு வெகுவாக குறைந்துள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீண்ட விடுமுறையின் காரணத்தினாலும் கொவிட் – 19 இற்கான Booster தடுப்பூசியாக Pfizer போடப்படுவதினால் இரத்த வங்கியில் இரத்ததானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
அதுத்துடன் இரத்ததான முகாம்களையும் ஏற்பாடு செய்ய முடியவில்லை. நடைபெற்ற இரத்ததான முகாம்களில் குறைந்தளவு எண்ணிக்கையான குருதிக்கொடையாளர்களே இரத்ததானம் செய்துள்ளளனர்.
இதனால் இரத்த வங்கியில் குருதியின் அளவு கணிசமான அளவு குறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியவில்லை.இரத்த வங்கியின் இன்றைய கையிருப்பு 185 போயிண்ட் ஆகும்.
நாளொன்றிற்கு 35 – 40 போயின்ட் குருதி எமது இரத்த வங்கியால் விநியோகிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் தற்போது இருக்கும் குருதி இன்னும் 5 நாட்களுக்கு மட்டுமே போதுமானது.இது ஆபத்தான நிலையாகும்.
ஆனால் எமது இரத்த வங்கியில் இருக்க வேண்டிய கையிருப்பு 330 போயிண்ட். இதற்கு முன்னரும் இவ்வாறான நிலை ஏற்பட்ட போது அதிகமான குருதிக்கொடையாளர்கள் இரத்த வங்கிக்கும் வருகை தந்து இரத்ததானம் செய்துள்ளதுடன் பல இரத்ததான முகாம்களை ஒழுங்கு செய்தும் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளீர்கள்.
அதற்கு இரத்த வங்கியின் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த ஆபத்தான நிலையை தவிர்ப்பதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பை கோருகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.