கனடா வாழ் புலம்பெயர் தமிழர்களால் கல்முனையில் 10 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
பாண்டிருப்பு கலாசார மண்டபத்தில் அ.நிதான்சன் (இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் வாலிப முன்னணி துணைச்செயலாளர்) தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அதிதிகளாக கி.சேயோன் ( தலைவர் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி),சமூக ஆர்வலர் வை. கே நாதன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.