2020ஆம் ஆண்டுக்கான ரி-20 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடர்: எதிர்பார்ப்பு மிக்க போட்டி அட்டவணை வெளியீடு!

நடப்பு ஆண்டுக்கான ரி-20 உலகக்கிண்ணத் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது.

இத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி முதல் நவம்பர் 13ஆம் திகதிவரை அவுஸ்ரேலியாவில் நடைபெறுகின்றது. இத்தொடரில் மொத்தம் 45 போட்டிகள் நடைபெறுகின்றது.

அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபார்ட், மெல்பேர்ன், பெர்த் மற்றும் சிட்னி உள்ளிட்ட இடங்களில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரையிறுதிப் போட்டிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்திலும், அடிலெய்ட் ஓவல் மைதானத்திலும் முறையே நவம்பர் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் நடைபெறும்.

இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் திகதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பகல் இரவு போட்டியாக நடைபெறுகிறது.

இந்ததொடரில், அவுஸ்ரேலியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் சுப்பர்-12 சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளன.

அதேசமயம் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், நமீபியா, ஸ்கொட்லாந்து, ஆகியவை முதன்மைச் சுற்றுக்கு முந்தைய தகுதிச் சுற்றுகளில் விளையாடுகின்றன. இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை அடுத்த மாதம் 7ஆம் திகதி தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *