
யாழ்ப்பாண கடல் பரப்புகளில் இந்திய மீன்வர்களின் வருகையை தடுத்து நிறுத்துமாறு கோரி காரைநகர் பிரதேச செயலகம் முன்பாக மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் மற்றும் காரைநகர் கடல் தொழிலாளர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன் போது வீதி மறியல் போராட்டத்திலும் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் ஜனாதிபதிக்கு கோரிக்கைளை அனுப்பி வைக்கும் வகையில்,பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது.
மேலும் போராட்டத்தின் போது இலங்கை அரசே உள்ளூர் இழுவைமடி படகை தடை செய்,இலங்கை அரசே இந்திய படகுகளை கையகபடுத்து போன்ற வாசகங்களை எந்திரவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
