
வடக்கு கிழக்கில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் கோட்டாபாய மனித உரிமை மீறல்களை செய்துள்ளார் என, கொரிய நாட்டு சபாநாயகருக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சபையில் இன்று எடுத்துரைத்துள்ளார்.
மனித மீறல்கள் இடம்பெறாது , நாட்டின் தேசிய பாதுகாப்பு பாதுகாக்கப்படும் என்று கூறி கோட்டாபாய ஆட்சி பீடம் ஏறினார்.
ஆனால் 9 பேரை கொலை செய்த கடல் படை அட்மிரலை விடுவித்து, பதவி உயர்வும் வழங்கியுள்ளார்.
போர் குற்றம் இடம்பெற்றமைக்கான ஆதாரங்களை நான் தருகின்றேன். நான் தயார் என தெரிவித்தார்.
சீனாவிலிருந்து 10 மெற்றிக் தொன் அரசி இறக்குமதி செய்யப்படவுள்ளது.
அவை அனைத்தும் தரமில்லாத அரசி. இதை இறக்குமதி செய்ய உங்களுக்கு வெட்கமில்லையா.இது ஒரு விவசாய நாடு.
இங்கு கத்த வேண்டாம். முடிந்தால் உங்கள் ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிங்கள மக்களிடம் சென்று கதையுங்கள் பார்ப்போம். உங்களை அடித்து கலைப்பார்கள் என்றார்.