
நாட்டின் டொலர் இருப்பு தொடர்பில் சிங்கள ராவய அமைப்பு மத்திய வங்கிக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
நாட்டில் நடக்கும் அசாதாரண நிலைமை குறித்தும், டொலர் பற்றாக்குறை சம்பந்தமாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று நாங்கள் மத்திய வங்கியிற்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளோம்.
குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
இலங்கையில் சேமிப்பில் மில்லியன் 1.6 டொலர்களே காணப்படுகிறது. இக் கட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் பாரீய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து எண்ணெய், அத்தியாவசிய பொருட்கள் எதுவுமே பெற்று கொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.
அங்கு பால்மா வரிசையில் மக்கள் நிற்கின்றனர். எண்ணெய் இல்லாமல் மின் துண்டிப்பு ஏற்படுகிறது.
இவ் அனைத்தும் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் ஆகும்.
நம் நாட்டில் உள்ள மாணவர்களிற்கு பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத நிலையில் வெளி நாடுகளில் சென்று கல்வி பயிலும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இவை யாவும் நாட்டு ஜனாதிபதி, மத்திய வங்கி அதிபதிகள் அறிந்திருக்க வேண்டும்.
எனவே இவ்வாறான செயற்பாட்டுக்கு நீதியை வழங்க வேண்டும்.
இவற்றிற்கு தீர்வு எடுக்காவிடின் அனைவருக்கும் பாரிய சிக்கல் முகம் கொடுக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.