
கொழும்பு − பொரளை − கித்துல்வத்த பகுதியிலுள்ள 5 வீடுகளில் தீ பரவியுள்ளது.
இந்த தீ இன்று (21) முற்பகல் 10 மணி அளவில் பரவியதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.