
இந்த அரசின் பிரதான நோக்கம், திருடுதல், விற்றல், சாப்பிடுதல், பிச்சை எடுத்தல் ஆகிய செயற்பாடுகளே என நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
நாடு செல்லும் நிலையில் இப்போது என்ன தேவை என்று ஜனாதிபதிக்கு தெரியவில்லை.
மக்களுக்கு என்ன தேவை, என்ன பிரச்சனை என்று அவருக்கு தெரியாமல், தனது கன்னி உரை போல நிகழ்த்தி விட்டு சென்றுள்ளார்.
மனித உரிமை தொடர்பில் அவர் பேசினார். ஆனால் விசாரணை என்று அழைத்து செல்லப்படும் நபர்களை இப்போது காணவில்லை.
இவர்களின் நோக்கம் விற்றல், பிச்சை எடுத்தல் ஆகியவையே என்றார்.