
மூதூரில் வறுமைக் கோட்டின்கீழ் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மூதூர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட அல்ஹம்றா மகா வித்தியாலயம், தி/மூ/சாஹிரா மகா வித்தியாலயங்களில் வறுமைக் கோட்டின் கீழ் கல்விகற்று வருகின்ற 100 மாணவர்களை இணங்கண்டு அவர்களுக்கு 2700/= ரூபா பெருமதியான கற்றல் உபகரணங்களை அல்-ஹிக்மா பௌண்டேசன் தொண்டு நிறுவனத்தினால் (20) வியாழக் கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அல்-ஹிக்மா பௌண்டேசன் நிறைவேற்று அதிகாரி அஷ்ஷேஹ் அப்பாஸ் இபாதுல்லாஹ் , அந்நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.நிஸ்புல்லா , மூதூர் வலைய உதவிக் கல்விப் பணிபாளர் பீ.ஹாஜா முஹைதீன் , பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேச சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட இந்நிறுவணத்தின் ஊழியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


உங்களுக்கு வெட்கமில்லையா? ஆளும் கட்சியை சரமாரியாக கிழித்த சாள்ஸ் எம்.பி