
தயவு செய்து யாழ்ப்பாண மீனவர்களின் உண்மை நிலை தொடர்பில் சரியான செய்திகளை வெளியிடுமாறு யாழ் மாவட்ட கடல் தொழிலார் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.
யாழ்ப்பாணம் காரைநகரில் இன்று இடம்பெற்ற போராட்டத்தை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண கடல் பரப்பில் இந்திய மீனவர்களின் அத்து மீறல் தொடர்கிறது. அதை எதிர்த்து நாம் போராடுகின்றோம்.
ஆனால் முன்னுக்கு பின்பு முரணான செய்திகளால், தமிழ் நாட்டு மக்களுடன் முரண்பாட வேண்டியுள்ளது.ஆகவே சரியான தகவல்களை வழங்குங்கள்.
நாமும் இந்திய மீனவர்களும் ஒன்று தான். அவர்களிடம் எமக்கு கோபம் இல்லை.
2500 இழுவை மடி தொழிலையும் கை விட வேண்டும், எங்கள் கடல் பரப்புக்குள் அவர்கள் நுழைய கூடாது இதை தான் நாம் கேட்கின்றோம் என மேலும் தெரிவித்துள்ளனர்.
உங்களுக்கு வெட்கமில்லையா? ஆளும் கட்சியை சரமாரியாக கிழித்த சாள்ஸ் எம்.பி