
இலவசமாக வழங்கப்படும் மருத்துவ உதவி விபத்துக் காப்புறுதியானது கலைஞர்களுக்கு எம்மால் வழங்கக்கூடிய சிறந்த பரிசாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கலைஞர்களுக்கான காப்புறுதி பத்திரம் வழங்கும் விழா அலரி மாளிகையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பிரதமரின் தலைமையில் கலைஞர்களுக்கான காப்புறுதி பத்திரம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் , இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர் நிசாந்தி ஜயசிங்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்:
கலாசார பாரம்பரியம் நிறைந்த பெருமைமிக்க வரலாற்றை நமது நாடு கொண்டுள்ளது.
உங்களைப் போன்ற கலைஞர்களின் படைப்புகளால் இந்த வரலாறு வண்ணமயமானது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
ஒரு தேசமாக நாம் இன்னும் உலகின் முன் ஒரு சிறந்த கலாசாரத்திற்கு உரிமை கோரும் ஒரு தேசமாகும்.
இலக்கியம், நடனம், நாடகம், கலை, பொம்மலாட்டம், சிற்பம்,இசை மற்றும் சினிமா ஆகியவற்றின் மூலம் சமூக யதார்த்தத்தை ஆக்கப்பூர்வமாக மக்களிடம் கொண்டு செல்ல கலைஞர்கள் பெரும் முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சியை மக்கள் இன்னும் இரசிக்கிறார்கள்.
நம் நாட்டின் கலைஞர்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் தங்கள் கலைக்காக அர்ப்பணிக்கிறார்கள்.
அவர்கள் பணிபுரியும் துறையை மதிக்கிறார்கள். அத்துடன் அன்பு செலுத்துகின்றனர். அவர்கள் தங்கள் பொருளாதாரத்தை விட கலைக்கு மதிப்பளித்தனர் என்றார்.
