பொலிஸாரை கெடுப்பது அதிகாரிகளே!பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு

போக்குவரத்து பொலிஸ் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 38வது ஜூனியர் போக்குவரத்து முகாமைத்துவ பாடநெறியை பூர்த்தி செய்த 192 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு குற்றப் பதிவுப் பிரிவு கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது பொலிசார் தமது கடமைகளை எவ்வளவு சிறப்பாகச் செய்தாலும், அதிகாரிகளின் கைவரிசையால் பொலிஸாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நிகழ்வில் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட மற்றும் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *