முல்லைத்தீவில் மற்றுமொரு கொரோனா மரணம்

முல்லைத்தீவு மல்லாவியில் வீட்டில் தனிமையில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் உயிரிழந்த நபரின் பி.சி.ஆர் பரிசோதனையின் போது இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி புகழேந்தி நகர் பகுதியில் 10.08.21 அன்று வீட்டில் இருந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் புகழேந்தி நகர் நமளங்குளம் பகுதியில் வீட்டில் இருந்த 47 அகவையுடைய ஆண் ஒருவர் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்தோடு இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது இதன் முடிவு 12.08.21 அன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இவரது உடலம் வவுனியா கொண்டு செல்லப்பட்டு மின்சார சுடலையில் எரியூட்டப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *