
கிறிஸ்தவர்களின் மத உரிமையை உறுதிப்படுத்துமாறு, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினரும் இலங்கை கிறிஸ்தவ வாலிபர் பேரவை தலைவருமான ஆ.ஜோன்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்திய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஏப்ரல் குண்டுத் தாக்குதல் சம்பவம் அடிப்படைவாத மதக்குழுவினால் நடைபெற்றுள்ளது. அண்மையில் கொழும்பு பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் ஒப்பிடும் போது இலங்கை திருநாட்டில் கிறிஸ்தவ மதத்தினை பின்பற்றுபவர்களுக்கு முழுமையான சுதந்திரம் இல்லை என்பது தான் தெளிவாக தெரிகின்றது.
தற்போது நாட்டில் உள்ள கோட்டபாய தலைமையிலான அரசாங்கத்திடம், இந்த மத அழிப்பு சம்பவத்திற்கு உடனடியாக நீதி தேவை இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றோம்.
கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் செயற்பாடானது நியாயமான முறையில் இருக்கின்றது.
அவரிடத்திலும் நாங்கள் முறையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க இருக்கின்றோம் கிறிஸ்தவர்கள்,கிறிஸ்தவ மத்திற்கு எதிரான தாக்குதல் சம்பவத்திற்கு நீதி வேண்டும் செயற்பாட்டினை நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் தாக்குதலின் பின்னர் நாங்கள் பல்வேறு சம்பவங்களை வெளிக்கொணர்ந்துள்ளோம்.
மட்டக்களப்பு பல்கலைக்கழகம் உருவாக்கிய முன்னால் கிழக்கு மாகாணசபை ஆளுனர் கிஸ்புல்லா எவ்வாறு நிதியினை பெற்றுக்கொண்டார், எவ்வாறு அந்த நிதி வந்தது உள்ளிட்ட அனைத்து முஸ்லீம் அடிப்படைவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் தொடர்பில் கொழும்பில் உள்ள நிதிக்குற்றப்பிரிவில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.
அதன் பின்னர் எங்கள் அமைப்பினை சேர்ந்த பலருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
முத்தையன் கட்டு 3 ஆம் கண்டம் இடது கரையினை சேர்ந்த கனகராசா கவியரசன் என்பவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இவ்வாறு பலருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
இலங்கை நாட்டில் கிறிஸ்தவமத்தினை பின்பற்றுபவர்களுக்கு பாரிய உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது இவை மாற்றப்படவேண்டும்.
அரசாங்கம் இவ்வாறான அடிப்படைவாத செயற்பாடுகளை மேற்கொள்வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
சஹ்ரான் குண்டு வெடிப்பு திசைமாறி செல்வது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் ஏப்ரல் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சஹரானும் அவரது குழுக்களும் தான் தொடர்பு பட்டிருக்கின்றார்கள்,
விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் பலர் பிரிந்து சென்றார்கள் பல அமைப்புக்களை உருவாக்கி செயற்பட்டார்கள் அவர்களின் ஆயுதங்கள் அனைத்தும் முஸ்லிம் அடிப்படைவாத குழுக்களிடம் தான் இருக்கின்றது என, இது தொடர்பில் பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இவற்றை வைத்து இந்த நாட்டிற்கும் தேசத்திற்கும் எதிரான வேலைத்திட்டத்தினை செய்து கொண்டிருக்கின்றார்கள் பல முஸ்லீம் அமைப்புக்கள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளது
முஸ்லீம் அடிப்படைவாத தளபதிகள் சிலர் இன்று இந்த அரசாங்கத்தினால் புனர்வாழ்விற்கு உட்படாமல் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியாமல் இருக்கின்றார்கள்.
அவர்கள் அனைவரும் முன்னால் கிழக்கு மாகாண ஆளுனர் கிஸ்புல்லா தலைமையில் ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கின்றோம் என்ற தொணியில் குறிப்பிட்டளவு ஆயுதங்களை ஒப்படைத்தார்கள் அனைவிட வேறு ஆயுதங்கள் முஸ்லீம் அடிப்படைவாத அமைப்புகளிடத்தில் இருக்கின்றது
முஸ்லீம் அடிப்படைவாத அமைப்புக்கள் சிலவற்றை இந்த அரசாங்கம் தடைசெய்தாலும் இன்னும் அநேகமான அமைப்புக்கள் வெளிநாடுகளில் இருந்து நிதியினை பெற்று இந்த தேசத்தினை ஒரு முஸ்லீம் நாடாக மாற்றுவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கின்றார்கள்.
இந்த நாடு சிங்கள மயமாக்கலில் இருந்து வேறு ஒரு மத மயமாக்கலுக்கு செல்ல இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.