
இலங்கை ஜனாதிபதி கோட்டபாய நன்றி மறைந்தவர் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
கோட்டபாய நினைக்கின்றார் தமிழ் மக்களுக்கு உதவி திட்டங்களை மட்டும் வழங்கினால்,போதும் என்று.
எமக்கு தேவை இனப்பிரச்சினைக்கு தீர்வு.அது பற்றி கோட்டபாய சிந்திக்கவில்லை.
அவரின் உரையில் பலருக்கு நன்றி கூற மறந்து விட்டார்.தமிழர்கள் யாரும் முள்ளிவாய்க்காலை மறந்து விட மாட்டார்கள்.
எல்லாவற்றையும் செய்து விட்டு எமக்கு நிவாரணம் வழங்குவதாக கூறுகின்றார்.நாம் இந்திய உட்பட உலக நாடுகளையே நம்புகின்றோம் என்றார்.