அமர் ஜவான் ஜோதி போர் நினைவுச் சின்னத்துடன் இணைக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!

அமர் ஜவான் ஜோதி என்ற அணையா விளக்கு இன்று (வெள்ளிக்கிழமை) போர் நினைவுச் சின்னத்துடன் இணைக்கப்படவுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே இடம்பெற்ற போரில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் விதமாக  50 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால்  இது அமைக்கப்பட்டது.

அமர் ஜவான் ஜோதி 50 ஆண்டுகளாக எரிந்து வரும் நிலையில், இன்று மாலை தேசிய போர் நினைவு சின்னத்தில் உள்ள ஜோதியுடன் இணைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *