
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இந்த வருட ஆரம்பத்திலிருந்து 15 ஆம் திகதி வரை சுன்னாகம் நகரப் பகுதியில் பயணிக்கும் வயோதிபர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு சங்கிலி திருடிய நான்கு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் மூவர், நகை கடை உரிமையாளர் இருவர் உட்பட ஐவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 5 தங்கச் சங்கிலிகள் மீட்க்கப்பட்டுள்ளதோடு, திருடுவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் புத்தூர் கலைமதி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சிசிடிவி கமரா பதிவுகளைப் பார்வையிட்டு, சம்பவம் தொடர்பில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் தலைமையிலான அணியினர் துரிதமாக செயற்பட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுகாதார அதிகாரிகளுக்கு கொரோனா!