ஒரு கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளுடன் பிரித்தானிய பிரஜை கைது!

ஹிக்கடுவ பிரதேசத்தில் ஒரு கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளுடன் பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நேற்று வியாழக்கிழமை இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஹிக்கடுவ காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமையை, 43 வயதான குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டார்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று வெள்ளிக்கிழமை காலி பதில் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *