
பொலிஸார் மற்றும் கொழும்பு மாநகரசபை இணைந்து நடத்தும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் இன்று (13) முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு முகத்துவாரம் மிஹிஜய செவன சனசமூக நிலையத்திலும், தெமட்டகொடை வித்யாலங்கா பிரிவெனாவிலும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இந்த நிலையில், கொழும்பு மாநகரசபை அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டோர் அங்கு சென்று தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளமுடியும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.