சுழிபுரம் பகுதியில் மூன்று மூட்டை கஞ்சாவுடன் கணவன் மனைவி கைது

சுழிபுரம் மத்தியில் 85 கிலோவிற்கும் மேற்பட்ட கஞ்சாவுடன் கணவன், மனைவி ஆகியோர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்டம் சுழிபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை சோதனையிட்டபோதே கஞ்சா மீட்கப்பட்டதோடு வீட்டின் உரிமையாளரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் காங்கேசன்துறைப் பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *