இலங்கையில் 5, 400 ஐக் கடந்த கொரோனா மரணங்களை ஏற்றுக்கொள்வது தமக்கு வேதனையளிப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறான நிலைமை அதிகரிக்க அனுமதிக்கும் முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், அரசாங்கத்தின் பொறுப்புள்ள அமைச்சர் ஒருவர், “மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” எனக் தெரிவித்தார்.
நாட்டில் காணப்படும் மக்களின் நிலை பற்றிச் சிந்திக்காமல், தமக்கு வாக்களித்த 69 மில்லியன் மக்களையும் இழிவுப்படுத்துவது போல அறிக்கை விடும் அளவுக்கு இந்த அரசாங்கம் மோசமடைந்துள்ளமை துரதிர்ஷ்டமானது என்றார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
இலங்கையில் கொரோனா பேரழிவு ஆக்கிரமிப்பதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட போதும் எவ்வித அக்கறையும் இன்றி காணப்பட்ட இந்த அரசாங்கம்,தற்போதும் மிகவும் பைத்தியக்காரத்தனமாகவும் பொறுப்பற்ற விதத்திலும் நடந்துகொள்கிறது என்றார்.
அதுமட்டுமின்றி, கொரோனாவைக் கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணி உள்ளிட்டவையை அந்தந்த நாடுகளின் சுகாதாரத் தரப்பினரிடம் ஒப்படைத்தது.
ஆனால், நமது அரசாங்கமோ வைத்தியர் மலித் பீரிஸ், ஆனந்த விஜேவிக்ரம, அனில் ஜாசிங்க, ரவி ரணன், போன்ற நிபுணர்களின் ஆலோசனைகளை புறக்கணித்தது என்றார்.
எனவே, இலங்கை முற்றாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் அதிகார வெறி, மாயை, ஆணவம் மற்றும் பொறுப்பற்ற தன்மை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் துரதிர்ஷ்டவசமாக இதன் விளைவை மக்கள் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.