யாழில் மேலும் இரு கொரோனோ மரணங்கள்

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் இரு கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுப்பிட்டியைச் சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று (12) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

அத்துடன் வல்வெட்டித்துறை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் (11) உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்வடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *