பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்பீலி தோட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன், இந்த மாதம் 7ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளார்.
க.பீரபாகௌசல்யன் என்ற சிறுவனே காணாமல் போயுள்ளதாக பன்விலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் வேளையில், இவர் கற்றல் வேலைக்காக தேசப்படம் வாங்க பன்விலை நகருக்குச்சென்ற போதே, காணாமல் போயுள்ளதாக இவரது தந்தை தெரிவித்துள்ளார்.
Advertisement
எனவே குறித்த சிறுவன் தொடர்பான தகவல் அறிந்தவர்கள், பன்விலை பொலிஸாருக்கோ அல்லது 071-9043533 இலக்கத்துக்கோ அறியத்தருமாறு பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்