கே.எல். ராகுல் சதம்: இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா நிதான துடுப்பாட்டம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்தியா அணி, நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 276 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆட்டநேர முடிவில் கே.எல். ராகுல் 127 ஓட்டங்களுடனும் அஜிங்கியா ரஹானே ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

லண்டன்- லோட்ஸ் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 276 ஓட்டங்களை பெற்றது.

இதன்போது இந்தியா அணி சார்பில், ரோஹித் சர்மா 83 ஓட்டங்களுடனும் புஜாரா 9 ஓட்டங்களுடனும் விராட் கோஹ்லி 42 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் எண்டர்சன் 2 விக்கெட்டுகளையும் ஒல்லி ரொபின்சன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்னமும் 7 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவது நாளில், இந்தியா அணி இன்று துடுப்பெடுத்தாடவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *