
புனரமைக்கப்பட்ட ‘சிறிமதீபாய’ பிரதமர் அலுவலகம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரால் நேற்றுத் திறக்கப்பட்டது.
நினைவுக் கல்வெட்டை திரைநீக்கம் செய்த ஜனாதிபதி, அலுவலக வளாகத்தில் உள்ள புத்தர் சிலைக்கு பூஜை செய்த பின்னர் கடமைகளை ஆரம்பித்தார்.
அலுவலகத்தின் கடமைகளை ஆரம்பிப்பதை முன்னிட்டு, தபால் அட்டையும், நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டது.
‘சிறிமதீபாய’ வரலாறு பற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய நூல், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தவால், ஜனாதிபதிக்குக் கையளிக்கப்பட்டது.
100 வருடங்களுக்கு மேல் பழைமையான ‘சிறிமதீபாய’ 44 வருடங்களின் பின்னர் அதன் பழைய தோற்றத்துக்கே முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளது.