இறப்பதற்கு முன் சிறுநீரக தானம்: யாழ். இளைஞனின் நெகிழ்ச்சி செயல்

விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞன் உயிரிழக்க முன்னர் தனது சிறுநீரகங்களை தானமாக வழங்கிய நெகிழ்ச்சி சம்பவமொன்று யாழில் இடம்பெற்றுள்ளது.

இணுவில், தியேட்டர் வீதியை சேர்ந்த 29 வயதுடைய பிரிஞ்சன் எனும் இளைஞரே இவ்வாறு சிறுநீரகங்களை தானம் செய்தவராவார்.

இணுவில் – மருதனார்மடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன்றில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சையில் பலனின்றி நேற்றைய தினம் (12) உயிரிழந்திருந்தார்.

எனினும் அவர் உயிரிழப்பதற்கு முன்னதாக சுயவிருப்பின் பேரில் தனது சிறுநீரகங்களை தானம் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *