பொன்னாலை வரதராஜரின் வருடாந்த மகோற்சவம் நிறுத்தப்பட்டது

வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி மகோற்சவத்தை இம்முறை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்றைக் கருத்தில்கொண்டு சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க மகோற்சவம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னாலை வரதராஜ பெருமானின் 2021 ஆம் ஆண்டுக்கான ஆவணி மகோற்சவம் நாளைய தினம் (14) சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *