முச்சக்கரவண்டி – துவிச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்து: பெண் படுகாயம்

வவுனியா – குருமன்காடு பகுதியில் முச்சக்கரவண்டியும், துவிச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இவ்விபத்து சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குருமன்காடு பகுதியில் இருந்து துவிச்சக்கர வண்டியில் வந்த பெண் ஒருவர் காளி கோவிலடி வீதிக்குத் திரும்பிய போது, மன்னார் வீதி வழியாக வந்த முச்சக்கரவண்டி துவிச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து காரணமாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *