யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை வைத்தியசாலையில் பிறந்து 7 நாட்களேயான குழந்தைக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றைய தினம் (12) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த குழந்தைக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் தங்கியிருந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போதே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.