நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்று பரவலை கட்டு;படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் தேசிய கொரோனா தடுப்பு செயலணிக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருகிறது.
குறித்த கலந்துரையாடல் இன்று (13) காலை 11 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது காணப்படும் நிலைமையைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது பயணக் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போதைய சூழ்நிலையின்படி, நாட்டை முழுவதுமாக முடக்குவதற்கான எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்