
பசறை தமிழ் தேசிய பாடசாலைக்கு உயர்தர வகுப்பு மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பஸ்ஸொன்றும், படல்கும்பரயில் இருந்து மீரியபெத்த நோக்கி சென்றுகொண்டிருந்த லொறியொன்றும், பசறை 13 ஆம் கட்டை பாடசாலைக்கு அருகில் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகின.
இவ்விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
எனினும், வாகனங்களும் சேதமடைந்துள்ளன. பசறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.