ஜந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பமானது.

அந்தவகையில், யாழ் வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் தரம் ஐந்து புலமை பரீட்சைக்கு இன்றைய தினம் ஆர்வத்துடன் சமூகமளித்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.

அத்துடன், திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் இன்று ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்றது.

இதில் தோப்பூர் கல்வி கோட்டத்திற்குட்பட்ட அல்ஹம்றா மத்திய கல்லூரி, தங்க நகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, றோயல் கனிஷ்ட பாடசாலை, சல்மா பெண்கள் வித்தியாலயம், அல் ஷிபா வித்தியாலயம், அந்நூர் வித்தியாலயம், அல் அமான் வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தோப்பூர் அல் ஹம்றா மத்திய கல்லூரியின் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு தோற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை பெற்றோர்களும் அக்கறையோடு தமது பிள்ளைகளை பரீட்சைக்காக வழியனுப்புவதையும் அவர்களை அழைத்துச் செல்வதற்கு காத்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

சிம்மாசன உரை பற்றி கதைத்துக் கொண்டிருக்கப் போகின்றோம் என்றால் எங்களை போன்ற மடையர்கள் இருக்க முடியாது! சிவாஜிலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *